இந்தியாவில் ராமர் வழிபாடு என்பது பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு விஷ்ணு ஆலயங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்களிலும் கண்டிப்பாக ராமருக்கு என தனி சன்னதியோ அல்லது வழிபாட்டு இருப்பிடங்களும் இருக்கும். அவ்வாறு, இருக்கும் போது இந்தியா முழுவதும் காணப்படும் சிறப்புமிக்க ராமர் கோயில்களை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
இந்தியாவில் காணப்படும் இராமர் கோவில்கள்:
1. ராமசுவாமி கோவில்,
2. ராம் மந்திர்,
3. சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்,
4. கோதண்டராமர் கோவில்,
5. காலாராம் கோவில்,
6. ராம் தீரத் கோவில்,
7. தாபிராயர் கோவில்,
8. ராமராஜா கோவில்
1. ராமசுவாமி கோவில்:
தமிழ்நாட்டில், ராமநாதபுரம் என்பது ராமருடன் தொடர்புடைய ஆலயமாகும். ஆனால், இது சிவபெருமானுக்குரிய ஆலயமாகும். இருந்தபொழுதிலும், தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ராமருக்கான ராமசுவாமி கோவில் உள்ளது. இது 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ராமாயண காவியத்தின் ஓவியங்களும், சிற்பங்களும் நிரம்பியுள்ளன. இத்தகைய கலைப்படைப்புகளை நாம் இந்த கோவிலில் பார்க்க முடியும். ராமரும் சீதா தேவியும் இங்குத் திருமண கோலத்தில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். சத்ருக்னன் ராமரின் இடது புறத்தில் சாமரம் வீசியப்படியும், பரதன் குடை பிடித்தப்படியும், லட்சுமணன் வலது புறத்தில் வில்லை கையில் பிடித்தப்படியும் வீற்றிருக்கின்றனர். அவர்களுடன் அனுமனும் வீற்றிருக்கின்றார். இத்தல இறைவனை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.
2. ராம் மந்திர்:
புவனேஸ்வரில் உள்ள காரவேல் நகரில் இந்த ராம் மந்திர் கோவில் அமைந்துள்ளது. இந்நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த ராமர் ஆலயம், இப்பகுதி பக்தர்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் அழகிய உருவங்கள் அமைந்துள்ளது. இது ஒரு தனியார் அறக்கட்டளையால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகத்தில் அனுமன் மற்றும் சிவன் உள்பட மற்ற தெய்வங்களுக்கான சன்னிதிகளும் இருக்கிறது.
3. சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்:
இந்தியாவில் அமைந்துள்ள புகழப்பெற்ற ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. தெலுங்கானாவின் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் பத்ராசலம் என்ற பகுதியில் இந்தக் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை 'பத்ராசலம் கோவில்' என்றால் தான் அங்குள்ள பலருக்கும் தெரியும். பத்ராசலத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்ணசாலாவில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ராவணனால் சீதை கடத்தப்பட்டதும், சீதையை மீட்பதற்காக, இலங்கைக்குச் செல்லும் வழியில் ராமரும், லட்சுமணரும் கோதாவரி ஆற்றைக் கடந்த தாகவும், அந்த இடத்தில்தான் இந்த பத்ராசலம் ஆலயம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராமநவமி மற்றும் ராமர்-சீதா திருமண நாளில் இந்த ஆலயம் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் காணப்படும்.
4. கோதண்டராமர் கோவில்:
கோதண்டராமர் கோவில் கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஹிரேமகளூரில் அமைந்துள்ளது, இந்த ஆலயம் ஆனது கோதண்டராமர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் மூலவர் வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது. பொதுவாக, அனைத்து ராமர் ஆலயங்களிலும் ராமருக்கு இடது பக்கத்தில்தான் சீதாதேவி இடம்பெற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் ராமபிரானின் வலது பக்கத்தில் சீதையின் திருவுருவம் உள்ளது. ராமரின் பக்தருள் ஒருவர், ராமர் - சீதையின் திருமணத்தை காண விருப்பம் தெரிவித்ததால், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராம பிரான் இங்கு காட்சி கொடுத்ததாகவும் ஸ்தல வரலாறு சொல்கிறது. கருவறையில் ராமர் - சீதை மற்றும் லட்சுமணனும் அருள்பாலிக்கின்றனர்.
5. காலாராம் கோவில்:
இந்த ஆலயம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ளது. கூடுதல் சிறப்பாக இங்கு ராமர் வனவாசத்தின் போது வாழ்ந்த இடத்திலேயே இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றுக் கூறப்படுகிறது. இங்கு பழமையான மரத்தால் ஆன ஆலயம் இருந்த இடத்தில், சர்தார் ரங்கராவ் ஒதேகர் என்பவரால், 17-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரத்தின் சிலைகள் கருங்கற்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றும் சுமார் 12 அடி உயரம் கொண்டது. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. இது மேற்கு இந்தியாவில் அமைந்த சிறந்த ராமர் கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று.
6. ராம் தீரத் கோவில்:
இந்த ராமர் கோவில் ஆனது அமிர்தசரஸ் தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் மேற்கே சோகவான் சாலையில் அமைந்துள்ளது. இது வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதா தேவி தஞ்சமடைந்த இடம். அதோடு சீதாதேவி தங்களது பிள்ளைகளாகிய வா, குசா ஆகியோர்களைப் பெற்றெடுத்த இடமும் இதுதான் என்கிறார்கள். இந்த இடத்தில் சீதா தேவி குளிப்பதற்காகப் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறும் உள்ளது. எனவே, இது இந்தியாவில் உள்ள புனிதமான ராமர் கோவில்களில் ஒன்று.
7. தாபிராயர் கோவில்:
இந்த ஆலயம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, அதில் உள்ள மூலவரான ராமபிரான் திகழ்கிறார். அவரை 'திரிபிரயாரப்பன்' அல்லது 'திரிபிராயர் தேவர்' என்ற நாமங்களில் அழைக்கப்படுகிறார். புராணத்தின் படி, துவாபர் யுகத்தின் போது இங்குள்ள ராமபிரான, கிருஷ்ணர் வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் இறுதி காலத்தில் துவாரகை கடலில் மூழ்கியபோது, இந்த சிலையும் கடலில் மூழ்கியதாகவும், கேரளாவின் செட்டுவா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும். பின்னர், அந்த சிலையை மீண்டும் திரிபிரயாரில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உண்டாக்கப்பட்டது. இங்குள்ள ராமபிரான் நான்கு கரங்களுடன், அந்த கரங்களில் சங்கு, வட்டில், வில், மாலை ஏந்தியபடி காட்சி அளிக்கிறார்.
8. ராமராஜா கோவில்:
இந்த கோவில் மத்திய மாநிலத்தில் உள்ள இடத்தில் பெவா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசனின் மனைவியான பார்வதி ராணி, ராமபிரானின் தீவிர பக்தை ஆவாள். அவள் ஒரு முறை ராமபிரானை தரிசிப்பதற்காக அயோத்தி சென்றபோது. அங்கு இறைவனை வணங்கிய பின், தன்னுடைய ஊரிலும் ராமர் கோவிலை நிறுவ வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக அயோத்தியிலிருந்து ராமரின் சிலையை கொண்டு வந்தாள். அயோத்தியில் இருந்து ராமரின் சிலையை எடுத்து வந்து, ஆலயத்தை அமைக்கும் வரை அந்த சிலையை தன்னுடைய அரண்மனையில் வைத்து பூஜித்து வந்தாள். ஆலயத்தை அமைப்பதற்காக இடத்தைத் தேர்வு செய்தபின், அந்த சிலையை எடுக்க முயன்ற போது, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஆகவே ராணி வந்து வசித்து அரண்மனையே, ராமரின் ஆலயமாக மாறியது. இத்தல இறைவன் ‘ராமராஜா’ என்ற நாமத்தால் அழைக்கப்படுகிறது. இங்கே ராமர் கடவுளாக மட்டுமின்றி, ஒரு அரசனாகவும் ஆட்சி செய்கிறார். ராமநவமி தினத்தில், அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கி சல்யூட் என்ற மரியாதை இங்குள்ள ராமபிரானுக்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக