இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

சுத்தமான குடிநீரில் மறைந்திருக்கும் உடல்நல குறைபாடு

சுத்தமான குடிநீரில் மறைந்திருக்கும் உடல்நல குறைபாடு
At ஜூலை 04, 2024

இந்த உலகில் வாழும் எந்த ஒரு உயிரினமும் நீரின்றி வாழ முடியாது, என்பதனை 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, திருவள்ளுவர்: “நீரின்றி அமையாது உலகு”, என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதனால், என்னவோ நாம் இன்றைய காலகட்டத்தில் நீரின் தேவை அதிகமாக உள்ளதால், பல்வேறு வகையான நீர் ஆதாரங்களை பயன்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக தூய்மையான குடிநீரை பருக வேண்டும் என்பதையும் பயன்படுத்த வேண்டும் என்பதையும், உடல் நலத்தில் அக்கறை கொண்டு அனைவரும் பின்பற்றி வருகிறோம். 


இன்றைய காலத்தில் மருத்துவமும் அறிவியலும் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு ஏற்ப மக்களின் கல்வி அறிவு விகிதமும் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களது உடல் நல பாதுகாப்பிற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றி வருகின்றனர். இத்தகைய சுகாதாரம் என்பது அறிவியலின் வளர்ச்சியாலும் மருத்துவத்தின் துணையோடும் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது என்பது உண்மை.


என்றென்றும் அறிவியல் என்பது அதன் கோட்பாடுகளும் கொள்கைகளும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே நிரூபணம் பெற்று இருக்கிறது, என்று அனைவரும் அறிந்ததே… அப்படி இருக்கையில், மருத்துவத்தில் அறிவியலை புகுத்தி இருப்பதும், பல்வேறு கட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே பயன்பாட்டிற்கு வந்திருக்கும், என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்த அறிவியல் கோட்பாடுகளிலும் கண்டுபிடிப்புகளிலும் இருக்கும் அல்லது அறியப்படாத குறைபாடுகள் மிக பெரும் சுகாதார சீர்கேட்டையும் உடல் நல பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றால், அது மிகையாகாது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது ஏற்படும் குறைபாட்டிற்கும் சேதங்களுக்கும் இந்த அறிஞர்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. 


இருப்பினும் இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் குறைகளையும் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தான் கண்டுபிடிக்க முடியும். இந்த மாற்றங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தியே அறியமுடியும். அதன் அடிப்படையில் தான் இந்த சிறு வீட்டு பயன்பாட்டுக் கருவி, மிகப் பெரும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தியது, என்று தெரிந்தால் தங்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தலாம்…


இந்த வீட்டு பயன்பாட்டுக் கருவியை பயன்படுத்துவதன் மூலம், பல்வேறு பயன்கள் உள்ளது. இருப்பினும், இந்த அறியாத சிறு குறை; இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்காக இந்த கருவியை ஒதுக்கி விட முடியாது. அந்தக் குறையை சரி செய்யும் விதமாக; அதனை எப்படி பயன்படுத்தலாம்? என்பதை, இதன் மூலம் நீங்கள் அறியலாம்.


நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டு பயன்பாட்டுக் கருவி மின்னணு நீர் சுத்திகரிப்பான் (RO system).


இந்த நீர் சுத்திகரிப்பானால் என்ன உடல்நல பாதிப்பு வந்துவிடும்?, இது தருவது சுத்தமான குடிநீரை தானே? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். உண்மையிலேயே, இந்த நீர் சுத்திகரிப்பான் மிகவும் தூய்மையான குடிநீர் தருவதுதான். இது தரும் குடிநீரானது, நாம் கடைகளில் வாங்கும் சில வகையான அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீரின் தன்மையும் சமமாகவே உள்ளது.


இந்த சுத்தமான குடிநீரால் என்ன வந்துவிடும்? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், நீண்ட கால விளைவின் அடிப்படையிலேயே இது உங்கள் உடலில் குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 


இந்த சுத்தமான நீர் ஏற்படுத்தும் உடல் குறைபாடுகளில் காரணிகள், நீரில் இயல்பாக இருக்கும் ஊட்டச்சத்துகளும் இல்லாமல் இருப்பது. அதிலும் குறிப்பாக, தண்ணீரில் இயல்பாக இருக்கும் உப்பு சத்துக்களின் அளவு இதில் இல்லாமல் இருப்பது தான்.


நாம் இந்த நீர் சுத்திகரிப்பானை பயன்படுத்துவது; உப்பு நீரை குடிப்பதை தவிர்ப்பதற்கு தான். ஆனால் இந்த உப்பு பற்றாக்குறை நீரில் இருப்பது, என்ன விதமான உடல் பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம்.


நம் உடலில் நீரின் அளவை அதிகரிக்க, பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதில் முதலில் இருப்பது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் “எட்டு லிட்டர்” அளவுள்ள நீரையாவது பருக வேண்டும், என்பது ஆகும். ஆனால், நீரானது உடலில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது,  நீரில் உள்ள உப்பின் அளவை பொறுத்து தான். நாம் பொதுவாக நீர் பருகினால், அவை உடலில் உள்ள குருதியில் (இரத்தில்) கலந்து விடும். ஆனால், குருதியில் இருக்கும் செல்கள் அந்த நீரினை எடுத்துக் கொள்வதில்லை… ஏனென்றால், அந்த நீரானது உப்புச்சத்து இல்லாமல் இயல்புக்கு மாறாக மிகவும் சுத்தமாக இருப்பதால், அது குருதியில் ஹைபோநேட்ரிமியா (Hyponatremia) என்ற தாக்கத்தை ஏற்படுத்தும். 


இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும்போது இரத்தத்தின் கொள்ளளவு குறைகிறது. இதனால் இரத்த செல்கள் உடலில் உள்ள பிற நீர் சத்துவத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு, தனது கொள்ளளவை சமநிலை செய்ய முயற்சிக்கும். இதனால், என்ன ஆகிவிடப் போகிறது? என்று எண்ணுகிறோம்… மேலும், இதே போன்ற சூழ்நிலை தொடர்ந்தால்; ஒரு கட்டத்திற்கு பிறகு, இதனால் சமநிலை செய்ய முடியாத போது, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் பக்க விளைவு காரணமாக, பின்வரும் விளைவுகளை உடலில் ஏற்படுத்தும்:


✾ குமட்டல் மற்றும் வாந்தி

✾ தலைவலி

✾ ஒற்றைத் தலைவலி

✾ மனக்குழப்பம்

✾ உடலில் ஆற்றல் இழப்பு

✾ உடல் சோர்வு மற்றும் தூக்கம்

✾ மன அமைதியின்மை மற்றும் எரிச்சல்

✾ தசை பலவீனங்கள் 

✾ தசைப்பிடிப்புகள்

✾ வலிப்பு

✾ கோமா


என பல்வேறு பாதிப்புகளுக்கு ஆட்படுத்தும். மேலும் குறைவான உப்பு சத்துக்களை எடுத்துக் கொள்வதால், தைராய்டு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.


ஒரு சிலருக்கு ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட இந்த அறிகுறிகள் இருந்தால், அவர்கள் முதலில் தாங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகுகிறார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த அறிகுறிகள் அல்லது பக்க விளைவுகள்; அந்த குடிநீரால் ஏற்படுகிறது, என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 


ஏனென்றால், எனக்கு தெரிந்த நபர், இதே போன்ற அறிகுறிகளான தலைவலி, வாந்தி போன்ற பாதிப்பால்; சுமார் 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று பார்க்கும் பொழுதும், அதற்கான சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. மருத்துவ பரிசோதனை அறிக்கைகளும் அனைத்தும் சரியாக தான் உள்ளது, என்று கூறியிருக்கிறது. ஆனால், ஒரு சில மருத்துவர்கள், பொதுவாக குறைவான இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் எதனால் ஏற்படுகிறது?, என்பதை பற்றி அவர்களால் குறிப்பிட்டு விளக்க முடியவில்லை. 


பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், இணையத்தில் பிரபலமான ஒரு ஊட்டச்சத்து வல்லுநர்; உடலில் நீர் சத்தை அதிகரிப்பதை பற்றி விளக்கிய பொழுது, இதைப் பற்றி தெரிவித்தார்கள். நமது உணவில் எடுத்துக் கொள்ளும் அல்லது இரத்தத்தில் உள்ள உப்பின் அளவைப் பொறுத்து, உடலில் நீரின் அளவில் மாறுபாடு ஏற்படுகிறது என்பதை விளக்கினார்கள். அப்பொழுதுதான், எனக்கு தோன்றியது உப்பு சத்து குறைவான குடிநீரை எடுத்துக் கொள்வதும் இதற்கு ஒப்பானது என்று., அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீர் சுத்திகரிப்பான்களை பயன்படுத்தி வந்தார். அதிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தான் பருகி வந்தார். அன்றிலிருந்து தான் இந்த பிரச்சனை துவங்குவதாக தெரியவந்தது.


இதை உறுதிபடுத்த வேண்டும் அல்லவா?, ஒரு நாள் இதே போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட பொழுது, மருத்துவர் தந்த (ORS) மருந்தினை குடித்ததால் குறைந்தது. அதில் இருப்பது உப்பும் சரக்கரையும் சேர்ந்த கரைசல். எதிர்பாரதவிதமாக மற்றொரு நாள், உப்பு சேர்ந்த எலும்பிச்சை பழச்சாறு குடித்தபோதும் இந்த அறிகுறிகள் குறைந்தது. மற்றோரு முறை இதேபோல் ஏற்பட்டபோது, அவர், குடிநீரில் சிறிதளவு உப்பு சேர்த்து எடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது தலைவலியானது குறைய தொடங்கியது. ஆனால், அப்பொழுது எந்தவித மாத்திரைகளும் மருந்துகளும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த உப்பு கலந்து குடிநீரே நன்றாக செயல்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்கும் பொழுது தான், இது குறித்து தெரிய வந்தது.


மாறாக, இந்தப் பக்க விளைவுகளை அல்லது அறிகுறிகளை சமநிலைப்படுத்தும் நோக்கில் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், இது இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கும். அந்த நபர் தினந்தோரும், உடலுக்கு தேவையான சராசரி நீரினை எடுத்துக் கொண்டார். இருப்பினும், சிறிது நேரத்திலே தாகம் எடுப்பதாக தெரிவித்தார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது. நம் உடலில் ஏற்படும் இது போன்ற அறிகுறிகள் அல்லது பக்க விளைவுகள்; ஏதோ ஒரு குறைபாட்டை நம் உடலில் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே என்பதை, நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 


❀ உடலில் நாம் எடுத்துக்கொள்ளும் நீரானது அத்துணையும் உடலில் இருக்கும் செல்கள் எடுப்பதில்லை. அதற்கு, இந்த நீருடன் சில சத்துக்களின் துணையும் முக்கியம்.


❀ இதே போன்ற அறிகுறிகளோ அல்லது பக்க விளைவுகளோ உங்களுக்கு இருந்தால்?, உங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை பயன்படுத்திப்பாருங்கள்.


❀ இருப்பினும் இந்த நீர் சுத்திகரிப்பான்களை அறவே ஒதுக்கி விட முடியாது. 


❀ ஏனென்றால், நாம் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தும் நீரானது, மிகவும் மாசுபட்டும் பயன்படுத்த தகுதி இன்றியும் இருக்கிறது. 


❀ குறிப்பாக நிலத்தடி நீரில் இருக்கும் உப்பு சத்துகள் ஆனது, உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கனிமங்கள் அதில் இருக்கிறது. எனவே, அதில் ஏற்படும் கொடிய விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த நீர் சுத்திகரிப்பான்கள் மிகவும் அவசியம்.


❀ இருப்பினும், இந்த விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, “குடிக்கின்ற நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து பயன்படுத்தலாம்”, என்று அந்த ஊட்டச்சத்து வல்லுநர் தெரிவித்தார்.


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக