இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

தெய்வ மனம்

தெய்வ மனம்
At ஜூன் 27, 2025
நாம் கோவிலுக்கு செல்வது மன அமைதியையும் நிறைவையும் பெறுவதற்கு தான். அவ்வாறு நாம் கோவிலுக்குச் சென்று, நம் வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் தெய்வத்தின் முன் சமர்ப்பிக்கிறோம். அதில் பெரும்பாலும் நம் மனதிலேயே வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் தெய்வத்திடம் முன்வைக்கிறோம். ஏன் அவ்வாறு செய்கிறோம்? வாய் விட்டு வணங்குவதை விட, நம் மனதில் வணங்குவதற்கான காரணம் என்ன? நம் வேண்டுதல்களும் கோரிக்கைகளும் பிறருக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவா? அல்லது நம் மனதில் இருப்பதை தெய்வம் அறியும் என்பதற்காகவா? இந்த இரண்டு காரணங்களுமே பொருந்தும். அதையே நம் முன்னோர்கள் கடவுள் என்று கூறி, அதன் உண்மையை நமக்கு உணர்த்திருக்கிறார்கள். நம் "உள் கடந்திருப்பதே கடவுள்" என்பதை நாம் அறியலாம்.

இவ்வாறு இருக்கையில், நம் வேண்டுதல்களும் கோரிக்கைகளும் நம் மனதில் இருந்து அறியும் தெய்வம்; நம் மனதில் இருக்கும், "ஆணவம், வஞ்சகம், வெறுப்பு, சூழ்ச்சி" இதுபோன்ற தீய குப்பைகளையும் அறியக்கூடும் அல்லவா!... அப்படி இருக்கையில், எவ்வாறு நம் வேண்டுதல்களும் கோரிக்கைகளும் நிறைவேறும்? எவ்வாறு நமக்கு தெய்வத்தின் அருளும் அனுக்கிரகமும் கிடைக்கும்? இது அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

இதனையே நம் முன்னோர்கள் "மனமது செம்மையானால், மந்திரம் உரைக்க வேண்டாம்" என்றும் "தூயவர் இதயம்  போலத் துலங்கிடும் ஒளியே போற்றி" என்றும் வணங்கி இருக்கிறார்கள். நம் மனமும் அதற்கு ஏற்ப தூய்மையாக இருந்தால், அங்கே தெய்வத்தின் இருப்பிடமாக இருக்கும். நம் முன்னோர்கள் தெய்வத்தின் சாட்சியாக, எந்த ஒரு செயலையும் செய்தார்கள். அதையே நாம் பேச்சு வழக்கில் "மனதை தொட்டு சொல்" என்று நம் மனசாட்சியின் படி கேட்கிறோம். அந்த மனசாட்சியே அந்த தெய்வத்தின் சாட்சியாகும். நம் மனசாட்சிக்கு விரோதமாக ஏதேனும் செய்தால், அந்த மனசாட்சியே இன்று இல்லையேல் என்றாவது நம் மனதை வாட்டி துன்புறுத்தும். 

ஆதலால் தெய்வத்திடம் வணங்கும் முன், நம் மனதை தூய்மைப்படுத்தி மனிதனாக மாறுவோம்.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக