நாம் அன்றாடம் வணங்கும் தெய்வம், நம் வாழ்க்கையில் துணையாக இருந்து, நம்மை நல்வழிப்படுத்தும்... அப்பேற்பட்ட தெய்வம், அதன் நிலை அறிந்திட வேண்டும்.
தெய்வத்தின் இலக்கணம் என்ன?
அனைத்திற்கும் முதலாக முதன்மையாக திகழும் தெய்வம், நம் அனைவரின் தோற்றத்திற்கும் முன்பும் நம் வாழ்க்கைக்கு பின்பும், சர்வ வல்லமையாகத் திகழ்கிறது. எனவே, ஆதியும் அந்தமும் இல்லாத நிலையே தெய்வம், அதுவே பரம்பொருள்.
தெய்வத்தின் நிலை யாது?
அவ்வாறு, தெய்வத்தின் நிலை அறிந்து உணர்ந்து, அந்நிலையை இவ்வுலகிற்கு உணர்த்துவதற்காக, தெய்வத்திற்கு ஒப்பான அருளும் ஆற்றலும் படைத்துவர்களாக திகழும் தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள், யோகிகள், அடியார்கள், சாதுக்கள், தவசிகள், தெய்வ அவதாரங்கள், தெய்வ அம்சங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், முன்னோர்கள் என பல...
எனவே, நாம் அன்றாடம் வணங்கும் முன் அத்தெய்வத்தின் நிலை உணர்ந்து வணங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக