இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

கூட்ட நெரிசலும் தனிமனிதப் பொறுப்பும்

கூட்ட நெரிசலும் தனிமனிதப் பொறுப்பும்
At செப்டம்பர் 29, 2025
மன்னராட்சி காலங்களில், மக்கள், தங்கள் மன்னர்களுக்காகவும், மன்னர்கள் தங்கள் மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்து, ஒருவர்கொருவர் அர்பணிப்புடன் இருந்தார்கள். ஆனால் இன்றைய சமூகத்தில், மக்கள் தங்கள் உயிர்களை அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக பணயம் வைப்பதைக் காண்கிறோம். இவர்களைக் காணும் ஆர்வத்தில், கூட்டங்களில் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் கலந்துகொள்வது அதிகரித்து வருகிறது. 

இது மட்டுமா, இலவசங்கள், உணவு, நலத்திட்டங்கள் விநியோகங்கள், பொது விழாக்கள் என எதுவாக இருந்தாலும், கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் இடங்களில் சுயநலத்துடன் செயல்படுவதும், மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் தவறு. மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதை உணர்ந்தும், அங்கு செல்வதைத் தவிர்ப்பது அவசியம். கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் சேர்ந்து, கூட்ட நெரிசலை மேலும் அதிகரிப்பது, மற்றவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

இத்தகைய கூட்டங்களில், சிறு அசம்பாவிதமோ அல்லது கூட்ட நெரிசலோ பலரின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதற்கு யார் காரணம்? கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களா?, அனுமதி அளித்தவர்களா?, அல்லது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியவர்களா?

உண்மையில், இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணம் ஒவ்வொரு தனிமனிதனும் அவரவர்களுடைய பொறுப்பின்மையும் தான், என்பதை நாம் உணர வேண்டும். 

ஒருவரை ஒருவர் தள்ளுவதும், கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதும், தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, இதுபோன்ற ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. 

சுயநலமற்ற சிந்தனையும், எச்சரிக்கையான அணுகுமுறையும், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக